பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
ஒடுக்கப்பட்ட, பிற்ப்படுத்துப்பட்ட, சமூகங்களை அனைத்து துறைகளிலும் வலிமைப்படுத்துவதை நோக்கமாக கொண்டு, அனைத்து ஒடுக்கப்பட்ட, பிற்ப்படுத்துப்பட்ட, சமூகங்களை கைகோர்த்து தொலை நோக்கு பார்வையுடன் ஜனநாயக கோட்பாடுகளுக்குட்பட்டு ஒரு சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்திற்க்காக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் பேரியக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. பாப்புலர் ஃப்ரண்ட் கல்வி, பொருளாதாரம், அரசியல், சமூகச் சேவைகள், சமூக மேம்பாடு, சமுதாய விழிப்புணர்வு, மக்கள் போராட்டம், மனித உரிமை தளம், சட்டக்களம், ஊடகம் என அனைத்து தளங்களையும் தன்னகத்தே கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2001ல் மனித நீதி பாசறை (MNP) யாகவும், 2009ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என பரிணமித்து இன்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா, மணிப்பூர், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா என 9 மாநிலங்களில் செயல்படும் ஒரு தேசிய இயக்கமாக வளர்ச்சியடைந்துள்ளது.

ஹைதராபாத்தில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரன்ட் சார்பாக தேசிய பொது சுகாதார வாரம் கடைபிடிக்கப்பட்டது. உடல்நலனை பாதுகாப்பது சம்பந்தமாக போஸ்டர் பிரசாரம் நோட்டீஸ் விநியோகம் மற்றும் ஹைதராபாத் திலுள்ள ஆஜம்பூரில் கோல்டன் ஃபங்ஷன் ஹாலில் வைத்து மருத்துவ முகாம் ஆகியவை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு டாக்டர் எம் ஏ மொய்ஸ் அவர்கள் உடல்பருமன் சோதனை நடத்தி ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாநில செயற்குழு உறுப்பினர் மௌலானா அப்துல் ரஷீத் அவர்கள், நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியமுள்ள மக்களுடன் கூடிய வலிமையான ஒரு புதிய இந்திய தேசத்தை உருவாக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டார்

மனித உரிமை ஆர்வலர்கள் ஜீவன் குமார்(தலைவர் ஹியூமன் ரைட்ஸ்) ,முஹம்மது அஷ்ஃபாக்(தலைவர் கேம்பைன் ஃபார் ஹௌசிங் ரைட்ஸ்) ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.